தேவனை ஆராதிக்க அனுமதி தேவையில்லை

தேவனை ஆராதிக்க அனுமதி தேவையில்லை

Read More

தண்டிக்கப்படாதவரை தாக்குதல்கள் தொடரும்!

தமிழர்கள் மீது நடந்தேறிய படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய அரசும், குற்றவாளிகளும் தண்டிக்கப்படாதவரை, இலங்கைத்தீவில் சிங்களவர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள் மீதான வன்முறைகள் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடருக்காக ஜெனீவா சென்றுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், முன்னராக மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளின் தொடர்ச்சியே தற்போதைய மைத்திரி ரணில் கூட்டாட்சியிலும் இடம்பெறுகின்றன. இது ஆட்சிகளைக்கடந்து சிங்கள பேரினவாதத்தின் கோர முகத்தினை வெளிக்காட்டுகின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் இடம்பெறுகின்ற காலங்களில், இவ்வாறு முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற சம்பவங்கள், நிலைமைகளை திசை திருப்புகின்ற அரசின் செயல் என்பதற்கு அப்பால் இது அரசுக்கு அனைத்துலக அரங்கில் அழுத்தங்களை கொடுத்திருப்பதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவற்றையெல்லாம் ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, ஐ.நா மனித உரிமை சபையின் ஆணையாளர் அலுவலகத்தோடு சந்திப்புக்களை நடாத்தியிருந்தோம்.

அச்சந்திப்புக்களின் போது, தமிழர் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து அதனை இலங்கை அரசாங்கம் அழித்தது. அதன்போதும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பொறுப்புடன் நடக்கவில்லை. இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நியாயம் வழங்கும் வகையில் அமைந்திருக்கவில்லை.

தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த காலத்தில் சிங்கள அரசிற்கு சார்பாகவோ அல்லது நடுநிலையாகவோ இருந்த முஸ்லிம் மக்கள் இன்று இலங்கை அரசினால் குறிவைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு தேசம் என்கின்ற நிலப்பரப்பு இருந்ததால் அவர்களை அழித்த இலங்கை அரசு தேசம் என்கின்ற நிலப்பரப்பு இல்லாத முஸ்லிம் மக்களின் பலமாக திகழ்கின்ற அவர்களது பொருளாதாரத்தை தற்போது சிதைத்து வருகின்றது.

இதன் வெளிப்பாடே அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள். இலங்கை அரசாங்கம் தன்னைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை. தான் எதுவும் செய்யலாம் என்ற தோரணையிலேயே செயற்பட்டு வருகின்றது. இது பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததால் ஏற்பட்டவிளைவே.

எனவே தான் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பில் உரையாற்றும்போது இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என கோருகின்றோம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Read More

சாகர்மாலா ஒரு பேரழிவுக்கான திட்டம்?

ஒரு பேரழிவுக்கான திட்டம்? சாகர் மாலா திட்டத்தின் ஆபத்தை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டு!
Read More

INDIA சரியான பதிலடி | யாருக்கு? ஏன்? எதற்காக? |

சரியான பதிலடி | யாருக்கு? ஏன்? எதற்காக? |

Read More

TTV தினகரனின் அதிரடி அறிக்கை

எந்த ஊடகமும் வெளியிடாத அதிரடி அறிக்கை | TTV தினகரனின் இவ்வறிக்கையில் அப்படி என்ன இருக்கிறது?

Read More

தமிழ் நாட்டு மக்களை அழிக்க இந்திய அரசின் சதி

தமிழ் நாட்டு மக்களை அழிக்க இந்திய அரசின் சதி 
Read More

பைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்

பைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்

Read More

யாரெல்லாம் தமிழன்

நிராஜ் டோவிட் அவர்களே...தமிழர்கள் அனைவரும் இனைந்து தமிழ் (ம)ஆங்கிலம் ஆகிய இரு மொமிகளிலும் தமிழர் நலன் கருதி நம்பகமான செய்தி ஊடகத்தை நிறுவ வேண்டும்... ஏனெனில் தற்போது உள்ள அனைத்து ஆங்கில ஊடகங்கள் உன்மையை மறைத்து பொய் செய்தி கூறி வருகின்றனர்...நிங்கள் ஏதாவது சொய்தால் நாளைய தமிழ் மக்கள் ஒன்று படுவர்....தமிழர்களுக்கொன்று ஒரு நம்பகமான ஆங்கில செய்தி சேனல் வோண்டும்... அபோதுதான் உலகின் கவனத்திற்கு கொண்டு உண்மையை உரக்க சொல்ல வேண்டும்
Read More

இலங்கை போர் திரும்ப வருமா ?


இலங்கை போர் திரும்ப வருமா ?

Read More

தமிழின அழிப்பில் முஸ்லிம்களின் முக்கிய பங்கு

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழிக்க எங்களுக்கு நிறைய உதவிகளை முஸ்லீம்கள் செய்தார்கள். அவர்கள் தமிழ் பேச வல்லவர்கள் என்பதனால் புலிகளின் இடங்களுக்குள் ஆள ஊடுருவி, எல்லா தகவல்களையும் எங்களுக்கு தந்தார்கள். மக்களோடு மக்களாக கலந்து எமக்கு புலனாய்வு தகவலை தந்ததும் அவர்களே....முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன் என்று கூட்டுப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இது இனவாத வன்முறையாகும். யுத்தமல்ல. எனவே எமது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போது அவசரகால நிலையின் கீழ் இந்த விடயத்தில் தலையிட எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் நாங்கள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்.

தற்போது இராணுவத்தினர் அனைத்துப்பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒருவிடயத்தை கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் யுத்தத்தை முடித்தோம். முஸ்லிம் மக்களின் மொழி அறிவு எமக்கு பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம். எனவே அவர்களின் நிலைமை தொடர்பில் நான் கவலையடைகிறேன். நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Read More

மாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்

தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. லஞ்சப் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக, பாண்டே, எடப்பாடி பழனிச்சாமியை அணுகி, அரசு மற்றும் முதல்வர் செய்திகளுக்கு நல்ல கவரேஜ் கொடுப்பதாகவும்,  மற்ற கட்சிகள் இதே போல மீடியாவை கண்காணிக்க தனித் தனியாக ஆட்களை நியமித்திருப்பதாகவும் பேசியுள்ளார். எடப்பாடி பெரிய அளவில் பிடி கொடுக்கவில்லை.

மதுரையின் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் தலைமையில், ஊடகங்களை கண்காணித்து, எந்த சேனல், அரசுக்கு ஆதரவாக உள்ளது, எதில் செய்திகள் குறைவாக வருகின்றன என்பதை கண்காணித்து,  அரசு கேபிளில் இருந்து ஒளிபரப்பை நிறுத்தி விடுவோம் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டும் பணியை செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  இந்த நிலையில்தான் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் மற்றும் தங்கதமிழ்ச் செல்வன், ஆகியோர், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது ஊழல் புகாரை வெளியிட்டனர்.  இந்த செய்தியை போடக் கூடாது என்று எடப்பாடி தரப்பில் இருந்து நேரடியாகவே தந்தி நிர்வாகத்திடம் சொல்லப்பட்டது.   அது பாண்டேவிடமும் தெரிவிக்கப்பட்டது.  இரவு 7.30 மணி செய்தியில் அந்த செய்தி வெளியிடப்படவில்லை.   ஆனால் 8 மணி செய்தியில் அந்த செய்தி விரிவாக வெளியிடப்பட்டது.  

கோபத்தின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி.   தனது மீடியா செல்லை அழைத்து, தந்தி டிவியில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்த செய்திகள் எப்படியெல்லாம் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்பப்பட்டன என்பது குறித்து அறிக்கை பெறுகிறார். இந்த அறிக்கையை தந்தி டிவி நிர்வாகத்துக்கு அனுப்பி, என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார்.    நிர்வாகம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தந்தி டிவி அரசு கேபிளில் இருந்து நீக்கப்படுகிறது.  நான்கு நாட்களுக்கு அரசு கேபிளில் தந்தி டிவி தெரியவில்லை.  எப்போதுமே தந்தி டிவிக்கு ஒரே நிலைபாடுதான்.  குழப்பமேயில்லாமல் எப்போதும் ஒரு கட்சி சார்புதான்.   அந்த ஒரே கட்சி ஆளுங்கட்சிதான். 

அரசு கேபிளில் பிடுங்கப்பட்டதும் பதறிப் போனது நிர்வாகம்.   புல்லட்டின் எடிட்டர் பாஸ்கர் பாபுவை அழைத்து உடனடியாக ராஜினாமா செய்யச் சொன்னது.  பாண்டேவை அழைத்து அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னது.இத்தனை பெரிய பதவியில் இருந்து விட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியே பரவினால் வேறு வேலை கிடைக்காது என்பதால், வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் பாண்டே. எது எப்படியோ, இனி நீங்கள் அலுவலகம் வர வேண்டாம் என்று தெளிவாக கூறி விட்டது நிர்வாகம்.  பாண்டேவின் ஆதரவாளர்கள், அவர் சொந்த வேலையாக வெளிநாடு சென்று விட்டார்.   விடுப்பில் சென்று விட்டார் என்று கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டதுதான் உண்மை. அடுத்ததாக பாண்டே, பெருந்தலைவர் எச்.ராஜா அவர்களின் முகநூல் அட்மினாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

ஆவி, ஆத்துமா, சரீரம் இது குறித்து வேதம் சொல்வது என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம் இது குறித்து வேதம் சொல்வது என்ன? - அணி சபை செய்தி, மகள் ரெபோக்கா, எம் பி ஏ மாணவி. நாள்- 15-2-2018.

பைபிள் காலேஜ் போகவில்லை, பாஸ்டர் மகளுமல்ல, கல்லூரி மாணவி ரெபேக்கா ஒரு ஆழமான சத்தியத்தை ஆவியானவரின் உதவியுடன் போதிப்பதைப் பாருங்கள். 

அணி சபையில் அத்தனை பேருக்கும் ஆவியானவர் வாய்ப்புத் தருகிறார், அத்தனை பேரையும் வைத்து கற்றுக் கொடுக்கிறார் என்பதற்கு மகள் ரெபெக்காவின் செய்தி ஒரு சாட்சியாகும்.

அத்தனைபேரும் கைதட்டி மகள் ரெபேக்காவைப் பாராட்டுவதைப் பாருங்கள். அணிசபை என்பது ஒரு குடும்பம். இதில் அன்பு இருக்கும் பொறாமை கிடையாது.
Read More

முஸ்லீம்களை பிடித்து அடித்துள்ளார்கள்

அம்பாறை மாவட்டத்தில் ஒரு காலத்தில் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் இன்று அங்கே முஸ்லீம்களை காண்பதே அரிதாகிவிட்டது. காரணம் சிங்களவர்கள் அங்கே குடியேறி. முஸ்லீம்களை ஓரம் கட்டி விட்டார்கள். இன் நிலையில் அங்கே ஒரு சாப்பாட்டு கடை உண்டு. இதனை முஸ்லீம் இனத்தவர் நடத்தி வந்தார். எஞ்சியுள்ள தமிழ் முஸ்லீம்கள் அங்கே சென்று சாப்பிடுவது வழக்கம். நல்ல சுத்தமான பாய் கடை. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இளைஞர்கள்.

அதனை அடித்து நொருக்க ரூம் போட்டு திட்டம் போட்டுள்ளார்கள். எப்படி ஆரம்பிப்பது ? எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று திட்டம் போட்டு 6 பேராகச் சென்று அங்கே பிரியாணி வாங்கி சாப்பிட்டு விட்டு. அதில் ஏதோ மருந்து கலந்திருப்பதாக கூறி. வேலை செய்யும் முஸ்லீம்களை பிடித்து அடித்துள்ளார்கள். தாங்கள் கொண்டு சென்ற ஒருவகை மருந்தை கடையில் இருந்து எடுப்பது போல சினிமா பாணியில் எடுத்து, இது ஆண்களுக்கு ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்றும். பெண்கள் பாவித்தால் கரு கலையும் என்றும் கூறவே.

ஏன் அடிக்கிறோம் எதற்கு அடிக்கிறோம் என்று தெரியாத அவ்வூர் மோட்டு சிங்களவர்கள், கடையை அடித்து நொருக்கியுள்ளார்கள். ஒரு வழியாக கடையை உடைத்து செயல் இழக்க செய்துவிட்டார்கள். ஆனால் சிங்கள மருத்துவர்கள் சிலர், இப்படியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதுவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்ந்து இவ்வாறு செயல்படும் மருத்து இல்லவே இல்லை என்று யூரியூப்பிலும், பேஸ் புக்கிலும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இனி என்ன பிரயோசனம் ?  சிங்களவர்களின் பிறப்பு எண்ணிக்கையை குறைக்கவே முஸ்லீம்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று அம்பாறை
சிங்களவர்கள் புதுக் கதையை அளந்து வருகிறார்கள். இதற்குப் பின்னால் மகிந்த கும்பல் உள்ளதாக தகவல்...அதுவே உண்மையும் கூட...
Read More